நடிகை தமன்னாவுக்கு கேரள நீதிமன்றம் நோட்டீஸ் – ஏன் தெரியுமா?

Published by
Rebekal

பலரின் உயிரை காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விளம்பரம் செய்து வந்ததால் நடிகை தமன்னா மற்றும் பிரபல மலையாள காமெடி நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த சில காலங்களாகவே ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாடி அதன் மூலம் பணத்தை இழந்து கடனுக்குள் தள்ளப்படுவதால், மன அழுத்தத்தில் பலர் தற்கொலை செய்து உயிர் இழக்கின்றனர். இந்நிலையில் இந்த விளையாட்டை தடை செய்யுமாறு பல்வேறு சமூக ஆர்வலர்களும், பிரபலஙகளும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இறப்பவர்கள் ஒருபுறமிருக்க இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை விளம்பரப்படுத்த கூடிய பிரபலங்களும் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறரின் உயிரை காவு வாங்க கூடிய இந்த விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என்று பலர் கேட்டு இருந்த நிலையில், திரை உலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக நடிகர்களில் தமன்னா, பிரகாஷ்ராஜ், சுதீப், கேரளா மலையாள நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோர் விளம்பரப்படுத்துகின்றனர். கிரிக்கெட் வீரர்களும் விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர். எனவே இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு இளைஞர் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 27 லட்சம் ரூபாயில் இழந்து விட்டதாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து கேரள நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கிரிக்கெட் வீரர் மற்றும் மற்ற பிரபலங்கள் உட்பட தமன்னா மற்றும் காமெடி நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago