கன்னடத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் வெளியாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெளியான அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கேஜிஎப். இப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் நாயகனாக நடித்து இருந்தார் பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார்.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படம் அடுத்த வருட ஜூலை மாதம் தான் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார். யாஷ் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரமான அதிரா எனும் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார்.
இப்பட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் நேற்று கே.ஜி.எப் முதல் பாகம் வந்து ஒரு வருடம் ஆனதை அடுத்து கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாக முதல் போஸ்டர் வெளியானது. இதிலும் ராக்கி பாய் தனது ட்ரேட் மார்க் கம்பீர நடையுடன் இருக்கிறார். படத்தின் மீதான எதிர்பார்ப்பும் தற்போதும் அதிகரித்துள்ளது.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…