கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் கொரோனா (கொவிட்-19) வைரஸின் கோர தாண்டவம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதன்முதலில் சீனாவில் ஆரம்பித்துப் பரவத் தொடங்கிய, இந்த வைரஸ் பாதிப்பு சீனாவைத் தாண்டி இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுக்க 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், சீனா வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்நாட்டை வாட்டிவதைக்கிறது.
இதனால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில் வைரசால் நேற்று (வியாழக்கிழமை) வரை பலியின் எண்ணிக்கை 1,383-ஆக உயர்ந்துள்ளது. அதில் நேற்று மட்டும் 121 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த வைரசால் புதிதாக 5,090 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64,000-ஐ தொட்டுள்ளது. இதனிடையே இந்த கொடூர வைரசால் சுகாதார ஊழியர்கள் 1,716 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சீன மருத்துவனையின் மருத்துவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை நடனமாட வைத்து, நோயிலிருந்து மீள்வது குறித்து நம்பிக்கையூட்டி வருகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஹுபே மாகாணம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது. வைரஸ் பரவுவதைத் தடுக்க போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யாரும் யாருடைய வீட்டிற்கும் செல்லக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முனைப்பில் தீவிர ஆய்வு செய்து வருகிறது உலக சுகாதாரத்துறை.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…