இந்தியில் சப்பாக் திரைப்படத்தை அடுத்து, முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகி வரும் 83வது படத்தில் கணவர் ரன்வீர் சிங்குடன் சேர்ந்து தீபிகா படுகோனே நடித்து வருகிறார். இப்படத்தை கபீர்கான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த தீபிகா படுகோனே, ஹிந்தி மட்டுமின்றி தமிழ் படங்களிலும் நடிப்பதில் தான் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் எனக்கு பொருத்தமான கதைகள் அமைந்தால் எல்லா மொழிகளிலும் நடிப்பேன், மொழி ஒரு பிரச்சனை இல்லை என்று குறிப்பிட்டார். இதனிடையே தமிழில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த ராணா படத்தில் நடிக்க கமிட் ஆன தீபிகா படுகோனே, பின்னர் அந்த படம் எடுக்காமல் போடப்பட்டதால் அதையடுத்து ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்கிய கோச்சடையான் அனிமேஷன் படத்தில் ரஜினியுடன் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…
டெல்லி : இந்திய தேர்தல் ஆணையம், வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) தொடர்பான சேவைகளை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளை…