வெற்றியை அமைதி, ஒழுக்கம், கண்ணியத்துடன் கொண்டாடுவோம் என்று கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 8-வது அதிபருக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.நேற்று வாக்கு பதிவு நிறைவு பெற்ற நிலையில் தொடர்ந்து அங்கு வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்றது.
புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச மற்றும் இலங்கை பொதுஜன முன்னணி சார்பில் கோத்தபய ராஜபக்ச இடையே கடும் போட்டி நிலவியது.ஆனால் கோத்தபய ராஜபக்ச 50 % மேலான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.இதனால் இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொள்வதாக புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இந்த நிலையில் இது குறித்து கோத்தபய ராஜபக்ச தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,அனைவரும் இலங்கையின் புதிய பயணத்தில் இணைந்து பயணிப்போம். தேர்தல் பரப்புரையில் எப்படி அமைதி காத்தோமோ அதேபோல வெற்றியையும் அமைதி, ஒழுக்கம், கண்ணியத்துடன் கொண்டாடுவோம் என்று தெரிவித்துள்ளார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…