அமெரிக்காவில் உள்ள ஒருவர் தூக்கத்தில் ஏர்பட்ஸை விழுங்கியதால் காலையில் அவருக்கு அதிக நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தில் வசித்து வரக்கூடிய பிராட் கவுதியர் எனும் 38 வயதுடைய நபர் ஒருவர் இரவு தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது காதுகளில் ஏர்பட்ஸ் மாட்டி கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டு வரே தூங்கியுள்ளார். தூக்க கலக்கத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் அவர் தனது காதில் மாட்டியிருந்த ஏர்பட்ஸை விழுங்கியுள்ளார். காலையில் எழுந்து தண்ணீர் குடிக்க முற்பட்ட போது மிகவும் சிரமமாகவும் நெஞ்சு வலியும் இருந்ததையடுத்து அவரை மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவர்கள் அவரை சோதித்து கொண்டிருக்கும் பொழுதே தூங்கி எழும் போது தனது ஏர்பட்ஸ் ஒன்று காணவில்லை எனவே ஒருவேளை நான் அதை விழுங்கி இருப்பேன் என மருத்துவர்களிடம் அவர் சந்தேகம் தெரிவித்ததை அடுத்து எக்ஸ்ரே செய்து பார்த்த பொழுது அவரது உணவுக் குழாயில் ஏர்பட்ஸ் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து எண்டோஸ்கோபி சிகிச்சை மூலமாக அவரது உணவுக்குழாயில் இருந்த ஏர்பட்ஸை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மேலும் அவர் நலமாக தற்பொழுது வீட்டிற்கு வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…