நம்முடைய முன்ஜென்ம பாவங்களை கண்டறிந்து அதனை தீர்ப்பது எப்படி?!

Published by
மணிகண்டன்
  • எல்லாம் நன்றாக இருந்தும் ஏதோ ஒன்று நம் முன்னேற்றத்தை தடுத்து கொண்டே இருக்கும்.
  • அப்படி தடுத்து கொண்டிருக்குமானால் அது நீங்கள் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களின் பிரதிபலனாக கூட இருக்கலாம்.

நம்முடைய நிகழ்காலம் அனைத்தும் நாம் சரியாக செய்தும், ஏதோ ஒன்று அந்த செயலை தடுத்து நீங்கள் நினைத்த காரியத்தை அடைய முடியாமல் ஆகிவிடுகிறது. அதற்கு நம்மில் பலர் முன் ஜென்மத்தில் நாம் என்ன தவறு செய்தோமோ என்று எண்ண வைத்து விடுகிறது. அப்படி நம் முன் ஜென்மத்தில் செய்த பாவங்களை கணக்கிட்டு இந்த ஜென்மத்தில் அதற்கான பலன் அல்லது தண்டனை, சிறு குறைகள் நம்மில் பலருக்கும் நிகந்து இருக்கும்.

அதனை நிவர்த்தி செய்ய பல வழிகள் உள்ளன. அதாவது எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதனை தீர்த்து வைக்கும் வல்லமை நமது குல தெய்வத்திற்கு உண்டு. அந்த குலதெய்வ வழிபாட்டை முறையாக கடைபிடிக்க வேண்டும். நம்முடைய குல தெய்வம் எந்த தெய்வம், நம் முன்னோர்கள் எந்த குல தெய்வத்தை வழங்கினார்கள் என கண்டறிந்து குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.

அடுத்ததாக நம் முன்னோர்கள் வழிபாடு. முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து விடவேண்டும். அவர்களுக்காக அமாவாசை விரதம் கட்டாயம் இருக்க வேண்டும். எள், தண்ணீர் வைத்து முன்னோர்களின் ஆசியை பெற்று கொள்ள வேண்டும். பசுவிற்கு வெல்லம், வாழைப்பழம், அகத்தி கீரை போன்றவற்றை கொடுக்கலாம். காகத்திற்கு தினமும் மதிய உணவு படைக்க வேண்டும். இது நமது முன் ஜென்ம வினையை  குறைக்க கூடிய பரிகாரங்களில் ஒன்று.

ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று நமது இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு பிரார்த்திக்க வேண்டும். பின்னர், வீட்டிற்கு வந்து பூஜையறையில் நமது குலதெய்வத்தை மனதார நினைத்து வேண்டிக் கொண்டு அரச மர இலைகளை மூன்று மூன்றாக பிரித்து அதன்மீது உப்பை வைத்து பின்னர் உதிரி பூக்களை அதன் போட்டுக்கொள்ளுங்கள். அப்படியே அதன் மீது அகல் விளக்குகளை வைத்து 9 அகல் விளக்குகள் வைத்து வழிபடுங்கள். இதனை 9 அமாவாசைகள் தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முடைய பாவ வினைகளில் இருந்து நமக்கு மோட்சம் கிட்டும்.

நாம் கோவிலுக்கு செல்லும் போது சண்டிகேஸ்வரரை கண்டிப்பாக வணங்க வேண்டும். நம்முடைய முன்ஜென்ம பாவங்கள் எல்லாம் தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டவர் சண்டிகேஸ்வரர். அவரை வேண்டி கொண்டு அன்னதானம் செய்யலாம். அது நமது முன்ஜென்ம பாவங்களை போக்க வல்லது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

7 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

47 minutes ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

57 minutes ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

1 hour ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

3 hours ago