ஜனநாயக அரசை சேர்ந்த முன்னாள் எம்.பிக்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்த மியான்மர் ராணுவம்!

Published by
Rebekal

மியான்மரில் ஜனநாயக ஆட்சி நடைபெற்ற பொழுது எம்.பிக்களாக இருந்த அனைவரையும் மியான்மரில் உள்ள ராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியை கவிழ்த்து மியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கடந்த பிப்ரவரியில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆங் சான் சூகி அவர்களுடன் சேர்த்து முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் நள்ளிரவிலேயே கைது செய்யப்பட்டு மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

இதனை அடுத்து மியான்மர் மக்கள் மற்றும் உலகின் பல நாடுகளில் உள்ள மக்களும் மியான்மரில் நடக்கக்கூடிய ராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ச்சியாக மியான்மரில் மக்கள் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்பொழுதும் ராணுவ ஆட்சிக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கக் கூடிய ஆளும் கட்சித் தலைவர்கள் பலரையும் இராணுவம் கைது செய்து வருகிறது. இந்நிலையில், மியான்மரின் நிழல் அரசாக செயல்பட்டு வரக்கூடிய சி.ஆர்.பி.எச் அரசு நாட்டு மக்களுக்கு சாதகமாக செயல்படுவதுடன் அதற்கான அங்கீகாரத்தையும் நாடி வருகிறது.

ஆனால் இந்த சி.ஆர்.பி.எச் அரசை சட்டவிரோதமாக கருதக்கூடிய மியான்மர் இராணுவத்தினர், இந்த குழுவுடன் ஒத்துழைக்கக் கூடிய எவரும் தேசத்துரோக குற்றம் செய்தவர்களாக கருதப்பட்டு அதற்கான தண்டனையையும் பெறக்கூடும் என எச்சரித்துள்ளது. இந்நிலையில் இந்த சி.ஆர்.பி.எச் அரசுக்கு இராணுவத்தினரால் கவிழ்க்கப்பட்ட ஜனநாயக ரீதியிலான ஆங்சான் சூகி அரசை சேர்ந்த எம்பிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனராம்.

எனவே ராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததுடன், இந்த இயக்கத்திற்கு ஆதரவு அளித்து வருவதால் முந்தைய ஜனநாயக ரீதியிலான அரசை சேர்ந்த எம்.பிக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. மேலும் நிழல் அரசாகிய சி.ஆர்.பி.எச் அரசின் மூலம் மக்கள் பாதுகாப்பு படை ஒன்று கடந்த வாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படையும் பயங்கரவாத இயக்கம் என மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!

அரோகரா.. அரோகரா.. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது மகா கும்பாபிஷேகம்..!

தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…

12 minutes ago

கில் மாதிரி விளையாட ஆசைப்படுகிறேன்…சாதனை படைத்த வைபவ் சூர்யவம்சி பேச்சு!

லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…

13 hours ago

மஸ்கின் கட்சியில் இந்த மூன்று அமெரிக்கர்கள் இணைவார்கள்! ட்ரம்ப் ஆதரவாளர் லாரா லூமர் கணிப்பு!

வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…

13 hours ago

மடப்புரம் அஜித் சகோதரர் நவீன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி! என்ன காரணம்?

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…

15 hours ago

2 கோடி உறுப்பினர்களை சேர்க்க த.வெ.க மும்முரம்… ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு!

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை அடைய…

15 hours ago

சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன்), இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்…

17 hours ago