கொரோனா தடுப்பூசி மையங்கள் அருகில் இருப்பதைக் கண்டறிய மத்திய அரசானது வாட்ஸ்அப் தகவல் உதவி மையத்தை தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையானது தொடர்ந்து தீவிரமாகப் பரவி வருகிறது.எனவே,கொரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளுதல் ஆகியவைதான் சிறந்த வழி என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து,கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு முதல்கட்டமாக முன்களப் பணியாளர்கள் மற்றும் 45 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கு போடப்பட்டன.
இதனத்தொடந்து,மே 1 ஆம் தேதி முதல் 18 முதல் 44 வயதிற்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு தற்போது வரை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில்,மக்கள் தங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தைக் கண்டறிவதற்காக,மத்திய அரசானது “மை கவர்மென்ட் கொரோனா ஹெல்ப் டெஸ்க்” என்ற வாட்ஸ்அப் தகவல் உதவி மையத்தை தொடங்கியுள்ளது.
அதன்படி இந்த உதவியைப் பெற மக்கள்,+919013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் ‘Namaste’ என்று அனுப்ப வேண்டும். அதன்பின்னர்,கோவிட் வேக்சினேசன் சென்டர் உள்ளதை அறிய 1 என டைப் செய்து அனுப்ப வேண்டும்.பிறகு தங்களது மாவட்டத்தின் ஆறு இலக்க PIN code நம்பரை அனுப்ப வேண்டும்.இதனையடுத்து,மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள தடுப்பூசி மையங்களின் பட்டியலை தெரிந்துக்கொள்ள முடியும்.
சென்னை : பாமக தலைவர் பதவி தொடர்பாக ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நிலவுகிறது. இதனால் அன்புமணி ஆதரவாளர்களை பதவிகளில்…
சென்னை : போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை போதைப்பொருள் தடுப்பு…
சென்னை : நேற்றைய தினம் மதுரையின் வண்டியூர் பகுதியில் உள்ள அம்மா திடலில் ஒரு பிரமாண்டமான முருகன் மாநாடு நடைபெற்றது.…
சென்னை : மதுரையில் நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாடு, இந்து முன்னணி மற்றும் பாஜகவின் ஒருங்கிணைப்பில் மிகப் பிரமாண்டமாக…
ஈரான் : இஸ்ரேல் உடனான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஹார்மூஸ் நீரிணையை (ஜலசந்திமூடுவதற்கான தீர்மானத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. இது, ஈரானின்…
அயர்லாந்து : இயக்குநர் எச் வினோத் இயக்கிய 'ஜன நாயகன' திரைப்படம் தான் முழுநேர அரசியலில் இறங்குவதற்கு முன் நடிக்கும்…