நவாஸ்க்கு பிடிவாரன்ட்! பாக்.,அரசு தீவிரம்

Published by
kavitha

பாக்.,முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கைது செய்ய அந்நாட்டு அரசு லண்டனுக்கு ‘வாரன்ட்’ அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில், 3 முறை பிரதமராக இருந்து வலம் வந்தவர் நவாஸ் ஷெரீப், வயது 70.  கடந்த, 2018 ஜூலை மாதம், ஊழல் வழக்கில் இவர்க்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை அடுத்து லாகூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன், அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் மருமகன் முகமது சப்தாரும் ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறைச்சாலையில் இருந்த  நவாஸ் ஷெரீப்பிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.உடனடியாக சிகிச்சைக்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததை தொடர்ந்து, நீதிமன்றம் அவருக்கு, ஜாமின் வழங்கியது. பிரிட்டன் தலைநகர் லண்டனில்  சிகிச்சை பெற, அனுமதி வழங்கப்பட்டது.

எனவே கடந்த ஆண்டு நவம்பரில், நவாஸ் லண்டன் சென்றார். ஆனால் 8 வாரங்களில், அவர் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்று நீதிமன்றம் ஒரு உத்தரவினை உத்தரவிட்டிருந்தது. ஆனால் நீதிமன்றத்தின் உத்தரப்படி அவர் பாகிஸ்தானுக்கு இன்னும் திரும்பவில்லை.
இதற்கிடையே, வரும், 22ம் தேதி, நவாஸ் ஷெரீப்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பாக்., வெளியுறவுத் துறை செயலரிடம், இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தின் உதவி பதிவாளர் அதிரடியாக உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து  நேரில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கக்கோரி, நவாஸ் ஷெரீப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஷெரீப்பிற்கு எதிராக கைது வாரன்ட்டை பிறப்பித்தது. இதை பாக்., அரசு லண்டனில் உள்ள பாகிஸ்தான் துாதரகத்திற்கு அனுப்பி வைத்து உள்ளது. இதில், சட்ட ரீதியிலான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு விரைவில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துாதரக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Published by
kavitha

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

14 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago