உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 30,64,838 பேரில் 9,22,403 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து உள்ளார்கள்.
சீனா உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் அந்நாட்டை புரட்டிப்போட்டது. பின்னர் பரவ தொடங்கிய வைரஸ் சுமார் 200 நாடுகளை தற்போது மிரட்டி வருகின்றது. இதன் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அப்படி இருந்தாலும் வைரஸின் தாக்கம் குறையாமல் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வந்தாலும் மருத்துவத்துறையினரின் தன்னலமற்ற சேவையால் வைரஸ் பாதிப்பில் இருந்து பலர் மீண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், உலகளவில் கொரோனா வைரஸில் இருந்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,22,403 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,64,838 ஆக உள்ள நிலையில், அதில் 9,22,403 பேர் பூர்ண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இதுவரை கொரோனா வைரசுக்கு 2,11,609 பேர் பலியாகியுள்ளனர். தற்போது கொரோனா வார்டில் 19,30,826 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 56,300 பேர் மோசமான நிலையில் இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகளின் விபரங்கள்.
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…
தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…