ஓ மை கடவுளே படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்த சூப்பர் ஸ்டார்.! மகிழ்ச்சியில் OMK டீம்ஸ்.!

Published by
Ragi

ஓ மை கடவுளே படத்தினை மகேஷ் பாபு அவர்கள் பார்த்து விட்டு படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘ஓ மை கடவுளே’. இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகாசிங், வாணிபோஜன், ஷாரா, எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும், விது அயன்னா ஒளிப்பதிவில் லியான் ஜேம்ஸ் இசையமைத்திருந்தார். அதன் பின்னர், நடிகர் விஜய் சேதுபதி கடவுளாகவும், இயக்குநர் கௌதம் மேனன் கெஸ்ட் ரோலிலும் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் மிகப் பெரும் வெற்றியை பெற்றிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை பார்த்து விட்டு தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, ஓ மை கடவுளே படத்தின் ஒவ்வோரு காட்சியையும் நான் ரசித்தேன், அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.அஷ்வத் சிறப்பாக எழுதி டைரக்ட் செய்துள்ளதாகவும், அஸ்வினின் நடிப்பு எளிமையாக இருந்ததாகவும் கூறியுள்ளார். இந்த பதிவிற்கு இயக்குநர் அஷ்வத், அஸ்வின், ரித்திகாசிங், வாணிபோஜன் ஆகியோர் நன்றியை தெரிவித்துள்ளனர். நான் இந்த பதிவை பார்த்து விட்டு குத்தாட்டம் போடுவதாக அஸ்வின் கூறியுள்ளார். மேலும் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாராட்டு என்றும் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த ட்வீட்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Published by
Ragi

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

8 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

9 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

9 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

10 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

12 hours ago