பட்டியல் இனத்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த விவகாரம்.! விழுப்புரம் ஆட்சியர் சுமூக முடிவு.!

Published by
மணிகண்டன்

பட்டியல் இன மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காத விவகாரத்தில் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவில் திருவிழா அண்மையில் நடைபெற்றது. அப்போது பட்டியல் இனத்தை சேர்ந்த சிலர் கோவிலுக்கு உள்ள சென்றதாகவும் அவர்களை சிலர் உள்ளே அனுமதிக்காமல் தாக்கியதாக தெரிகிறது. இதனை அடுத்து பட்டியல் இன மக்கள் போராட்டம் , சாலை மறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்குப்பதிவின் கீழ் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மேல்பாதி கிராம பட்டியல் இன மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நேற்று இரு தரப்பு மக்களையும் முன் வைத்து இந்த பிரச்சனையை பற்றி பேசி சுமூக முடிவு எடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பழனி.

இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பு மக்களும் வெவ்வேறு தேதிகளில் திரௌபதி அம்மன் கோவிலுக்குள் செல்ல சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இரு தரப்பு மக்களும் எந்த தேதிகளில் கோவிலுக்குள் செல்ல உள்ளார்கள் என்பது குறித்து பேசி முடிவு எடுப்பார்கள், அதனை அடுத்து நாங்கள் நடவடிக்கை எடுப்போம் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

12 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

13 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

13 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

14 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

15 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

17 hours ago