Hossein Amir-Abdollahian, Minister of Foreign Affairs in Iran [Image source : Reuters]
பாகிஸ்தான் நாட்டின் எல்லை பகுதியில் உள்ள பலுசிஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் அல் அட்ஸ் அமைப்பு ஈரானில் அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அண்மையில் ஈரான், பலுசிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல் அட்ஸ் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
ஈரான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு.!
பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் ஈரான் தாக்குதலை அடுத்து, ஈரானில் செயல்பட்டு வரும் பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தின் முகாம்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் இதுவரை 9 பேர் பலியாகினர். இந்த ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் வியாழக்கிழமை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
மேலும், ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி இதுகுறித்து கூறுகையில், பாகிஸ்தான் ராணுவம் ஈரான் எல்லையில் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு பதில் கூற வேண்டும் என்று ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியிடம் ஈரான் விளக்கம் கேட்டுள்ளது.
பாகிஸ்தானில் பலூச் இன மக்கள் அதிகம் வசிக்கும் பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு ஈரானில் பலுசிஸ்தான் அமைப்பு பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பிற்கு ஈரான் மறைமுக ஆதரவு அளிக்கிறது என்பது பரவலாக சர்வதேச அளவில் பரவி வரும் செய்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…