அண்டை நாடான பாகிஸ்தானில் உள்ள விமானங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் போலி பைலட் உரிமங்களை வைத்து இருப்பதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சர் தகவல் தெரிவித்துள்ள செய்தி அந்நாட்டு பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் குலாம் அந்நாட்டு பார்லிமெண்டில் தெரிவித்த தகவல் வெளியாகியுள்ளது:
இது குறித்து அவர் கூறியதாவது:’நாட்டில் 262 விமானிகள் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டதாகவும். கண்டுபிடிக்கப்பட்டவர்களுக்கு பறக்கும் அனுபவமே இல்லை. போலி உரிமத்தை வைத்துள்ள பைலட்கள் அனைவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனமான பி.ஐ.ஏ, மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களிலும் தற்போதும் போலி விமானிகள் உள்ளனர். அவர்களில் பலர் வெளிநாட்டு விமானங்களையும் இயக்கி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் பாகிஸ்தானில் அண்மையில் நடந்த கராச்சி விமான விபத்தும் இது போன்ற போலி விமானிகளால் நடந்துள்ளதாக அம்பலமாகியுள்ளது.மேலும் இந்த கோர விபத்து நடப்பதற்கு முன் கன்ட்ரோல் ரூமிலிருந்து எச்சரிக்கை வந்துள்ளது.வந்த எச்சரிக்கையை கவனிக்காமல் பைலட்கள் இருவரும் கொரோனா வைரஸ் குறித்து உரையாடி கொண்டு இருந்ததாக தெரிகிறது.இந்நிலையில் கொரோனோ உரையாடே அவர்களின் இறுதி உரையாடலாக அமைந்தது. காரணம் விமானம் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.மேலும் வெளியாகிய இத்தகவலால் பயணிகள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…