இலங்கையில் கடந்த 2015-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. பாராளுமன்ற பதவிக்காலம் முடியும் முன் பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். கடந்த மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
நாடாளுமன்ற கலைக்கப்பட்டதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால் தேர்தல் நடைபெறவில்லை. இந்நிலையில், 5 மாதங்களுக்கு பின் இலங்கையில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது.
மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை காலை 8 மணி முதலே வாக்கு எண்ணும் பணி தொடங்கும் என கூறப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக வாக்குச் சாவடியில் வரும்போதும், வெளியேறும் போதும், கையை சுத்தம் செய்ய வேண்டும், அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், முககவசம் அணிந்து வர வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : மதுரையில் கடந்த ஜூன் 22ம் தேதி பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பால் நடத்தப்பட்ட முருகன் பக்தர்கள்…
திருப்பூர் : இந்து முன்னணி அமைப்பின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் தலைவராக இருந்த பாலமுருகன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்திவந்த…
சென்னை : இயக்குநர் லியோ ஜான் பால் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் ''மார்கன்'' திரைபடம் ஜூன் 27…
லீட்ஸ் : முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சதம் அடித்தார். அற்புதமான…
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
மொராவியன்-சிலேசியன் : செக் குடியரசின் ஆஸ்ட்ராவா நகரத்தில் நடைபெற்ற 'ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக்' தடகளப் போட்டியில் இந்தியாவின் 'தங்க மகன்'…