ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன், அமெரிக்காவின் அதிபராக இருக்கப் போகிறார் என குடியரசு கட்சி வேட்பாளராக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், நியூயார்க் டைம்ஸ் செய்தி ஊடகம் மற்றும் செய்னா கல்லூரி இணைந்து ஒரு தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் டிரம்புக்கு ஆதரவாக 36 சதவீத மக்களும், ஜோ பைடனுக்கு ஆதரவாக 50 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதில் அதிபர் டிரம்ப், ஜோ பைடனை விட 14 சதவீத வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.
இந்நிலையில் அந்நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பேட்டியளித்த குடியரசு கட்சி வேட்பாளராக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப், மக்கள் சிலர் என்னை நேசிக்க மாட்டார்கள். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்காவின் அதிபராக இருக்கப் போகிறார் என கூறினார். மேலும் பேசிய அவர், “ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் பேசமாட்டார் எனவும், அவர் பேசினால் யாரும் அவரைக் கேட்கமாட்டார்கள் என கூறினார். அதுமட்டுமின்றி, அவர் பேசும்போதெல்லாம் இரண்டு வாக்கியங்களை ஒன்றாக வைக்க முடியாது எனவும் கூறினார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…