கொலை வழக்கு கண்டறியும் நிபுணராக வெப் சீரிஸில் நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடைசியாக வெளியான களத்தில் சந்திப்போம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக குருதி ஆட்டம் , கசட தபற, பொம்மை, ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.
இதுமட்டுமின்றி இந்தியன் 2, ருத்ரன், ஓ மண பெண்ணே போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து தற்போது ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஆம், அந்த படத்தை நயன்தாராவை வைத்து ஐரா படத்தை இயக்கிய சர்ஜுன் கே.எம் இயக்கவுள்ளதாகவும், திரில்லர் கதையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கொலை வழக்கு கண்டறியும் நிபுணராக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இதற்கான படப்பிடிப்பு ராமேஸ் வாரத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதுவரை கதாநாயகியை தவிர்த்து மற்ற கதாபாத்திரத்தில் நடிக்காத பிரியா பவானி சங்கர் முதன் முதலாக கொலை வழக்கு கண்டறியும் நிபுணராக வெப் சீரிஸில் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…