கடின உழைப்பு மற்றும் எளிமையால் அனைவருக்கும் குருவாக உள்ளார் ரஜினிகாந்த் – ராகவா லாரன்ஸ்.!

Published by
Ragi

ரஜினியின் 45 ஆண்டு கால திரையுலகை பயணத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் ராகவா லாரன்ஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 45 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 15ம் தேதி பாலசந்தரின் ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தின் முதல் நடிகராக அறிமுகமாகி தற்போது சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் உச்சத்திற்கு வளர்ந்துள்ளார். இந்த நிலையில் ரஜினிகாந்த் திரையுலகில் 45 வருடங்கள் வெற்றிகரமாக முடித்த நிலையில், அதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

அதில் முதற்கட்டமாக மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து #48YearsOfRajinismCDP என்ற ஹேஷ்டேக்குடன் Common DPயை வெளியிட்டு இதுவரை யாரும் செய்யாத சாதனையை படைத்தது. இந்த நிலையில் தற்போது நடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் பாதம் கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ரஜினிகாந்தின் 45 ஆண்டு திரையுலக பயணத்தை தமிழ் திரையுலகமே வேற லெவலில் கொண்டாடி வருகிறது. இதை கண்டு அவரது ரசிகராக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றும், பெருமிதம் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரது கடின உழைப்பு மற்றும் எளிமை காரணமாக அனைவருக்கும் ஒரு குருவாக உள்ளார் என்றும், அவரது நல்ல ஆரோக்கியத்திற்கு தான் ராகவேந்திரா சுவாமியிடம் பிரார்த்தனை செய்வதாகவும் கூறியுள்ளார்.

 

Published by
Ragi

Recent Posts

அஜித் மரணம்: மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை.!

சிவகங்கை : திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலராகப் பணியாற்றிய அஜித்குமார் (27), நகை திருட்டு புகாரில்…

43 minutes ago
நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,03-07-2025 முதல் 05-07-2025 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

1 hour ago

7 நாட்கள் ஓய்வு கிடைத்த பிறகும் பும்ராவுக்கு அணியில் இடம் கொடுக்கவில்லை? ரவி சாஸ்திரி ஆதங்கம்!

எட்ஜ்பாஸ்டன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளரும், முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணியின்…

2 hours ago

வேறு மாதிரி என்றால், எந்த மாதிரி? டென்ஷனா எடப்பாடி பழனிசாமி!

சென்னை : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் நேற்று காலை 8:30 மணியளவில்…

2 hours ago

போதைப்பொருள் வழக்கு : ஜாமின் கேட்ட கிருஷ்ணா, ஸ்ரீகாந்த்! தீர்ப்பை தள்ளி வைத்த நீதிமன்றம்!

சென்னை : போதைப் பொருள் (கொக்கைன்) பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, ஜாமீன் கோரி சென்னை…

3 hours ago

அஜித்தை காப்பாற்ற முடியலன்னு வருத்தமா இருக்கு…வீடியோ எடுத்தவர் கொடுத்த பேட்டி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு வழக்கில்…

3 hours ago