கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பன்னா நல்லாயிருக்கும் தலைவரே…! இசைப்புயலிடம் வேண்டுகோள் விடுத்த ரசிகர்..!

Published by
Ragi

ட்வீட்டரில் ரசிகர் ஒருவர் இசைப்புயலிடம் கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பன்னா நல்லாயிருக்கும் தலைவரே என்று  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏ. ஆர். ரஹ்மான் தயாரித்து இசையமைக்கும் திரைப்படம் 99சாங்ஸ். இது இசையை மையமாக கொண்ட காதல் படமாகும். இதனை விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். இதில் இஹான் பட், எடில்ஸி வர்காஸ், லிசா ரே, மனிஷா கொய்ராலா, ரஞ்சித் பரோட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்த படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் மொத்தமாக 14பாடல்கள் உள்ளது. தமிழில் ஒரு சில பாடல்களை கார்க்கி மற்றும் தாமரை எழுதியதாக தகவல்கள் வெளியானது. 

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்திலிருந்து தேரி நாசார் என்ற பாடலின் இந்தி வெர்ஷன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர் களை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த பாடலின் தமிழ் வெர்ஷனை விரைவில் வெளியிட சொல்லி ரசிகர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். அதில் தேரி நாசார் பாடல் தமிழில் வர காத்திருக்கின்றேன் என்றும், இந்த பாடல் என்றால் எனக்கு பைத்தியம் என்றும் ஒருநாள் 50 முறைக்கு மேலாவது இந்த பாடலை கேட்பேன் என்றும், தமிழில் இந்த பாடலை கொஞ்சம் சீக்கிரம் ரிலீஸ் பன்னா நல்லாயிருக்கும் தலைவரே என்று கேட்டுள்ளார். அதற்கு ஏ. ஆர். ரஹ்மான், தேரி நாசார் பாடலின் தமிழ் வெர்ஷனை பாடலாசிரியர் கபிலன் மிகவும் நன்றாக எழுதியுள்ளார் எனவும், இந்தி வெர்ஷனை விட தமிழ் வெர்ஷன் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று பதிலளித்துள்ளார். எனவே இந்த பாடலின் தமிழ் வெர்ஷன் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கோடிக்கணக்கான ரசிகர்களை காத்திருக்கின்றனர் என்றே கூறலாம்.

 

Published by
Ragi

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

12 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

12 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

13 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

13 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

14 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

16 hours ago