சென்னை ஐகோர்ட்டில் சனம் ஷெட்டி தொடர்ந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த போது அவரது புகாருக்கு காவல் துறை எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
நடிகையும், மாடலுமான சனம் ஷெட்டி தற்போதைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு போட்டியாளராக திகழ்கிறார் . இவரும்,கடந்த சீசனில் போட்டியாளராக இருந்த தர்ஷனும் காதலிப்பதாக கூறப்பட்டது .ஆனால் தர்ஷன் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பின்னர் சனம் அவர்களை மறுப்பதாக கூறப்பட்டது . அதனையடுத்து அந்த விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது . இதற்கிடையில் சனம் அவர்கள் தன்னை காதிலித்து விட்டு திருமணம் செய்வதாக ஒப்புக் கொண்ட தர்ஷன் தற்போது மறுப்பதாகவும், தன்னை பற்றி தரக்குறைவாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்வதாகவும், அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார் .
ஆனால் தனது புகார் குறித்த உரிய நடவடிக்கையை காவலர்கள் எடுக்கவில்லை என்பதால் சனம் ஷெட்டி சென்னை ஐகோர்ட்டில் தனது புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உத்தரவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்றைய தினம் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது காவல் துறையினரிடம் சனம் ஷெட்டி அவர்கள் அளித்த புகார் குறித்து எடுத்த நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அகமதாபாத் : மழை காரணமாக மும்பை பஞ்சாப் இடையேயான ஐபிஎல் குவாலிஃபயர் 2 போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த…
சென்னை : கமல் - சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ள தக் லைஃப் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முத்த மழை' பாடல் யூடியூப்…
அகமதாபாத் : ஐபிஎல் குவாலிஃபயர் 2 சுற்றில் இன்று பஞ்சாப், மும்பை அணிகள் மோதுகின்றன. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
புதுச்சேரி : விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமாரின் மூத்த சகோதரர் கோ.க.நடேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் புதுச்சேரி…
சென்னை : மதுரையில் இன்று 48 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும்,…
சென்னை : அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை ஆதவ் அர்ஜுனா ஒருமையில் பேசிய வீடியோ வைரலானது. இதற்கு சீமான் உள்ளிட்டோர் கண்டனம்…