புதுமுக இயக்குனரான அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிகர் ஆரிக்கு வில்லனாக, இளம் மலையாள நடிகரான சரத்குமார் நடிக்கவுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நடிகர் ஆரி அறிவிக்கப்பட்டார். இவரது வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இவர் புதுமுக இயக்குனரான அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில், நடிகர் ஆரி முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தில், நடிகர் ஆரிக்கு வில்லனாக, இளம் மலையாள நடிகரான சரத்குமார் நடிக்கவுள்ளார். இவர் அங்கமாலி டைரிஸ் என்ற படத்தில் அப்பாணி ரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனால், இவர் ரசிகர்களால் அப்பாணி சரத் என்று அழைக்கப்படுகிறார். இவர் தமிழில் செக்க சிவந்த வானம், சண்டைக்கோழி-2 போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லீட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது இங்கிலாந்து. இதனால், பேட்டிங்…
அமெரிக்கா : ஈரானுக்கு எதிராக ஆபரேஷன் 'மிட்நைட் ஹேமர்' என்ற பெயரில் அமெரிக்கா வெற்றிகரமாக அணுசக்தி தளங்களை தாக்கியுள்ளது. இந்நிலையில்,…
சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…
லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…
தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…