புதுமுக இயக்குனரான அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிகர் ஆரிக்கு வில்லனாக, இளம் மலையாள நடிகரான சரத்குமார் நடிக்கவுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நடிகர் ஆரி அறிவிக்கப்பட்டார். இவரது வெற்றிக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இவர் புதுமுக இயக்குனரான அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில், நடிகர் ஆரி முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தில், நடிகர் ஆரிக்கு வில்லனாக, இளம் மலையாள நடிகரான சரத்குமார் நடிக்கவுள்ளார். இவர் அங்கமாலி டைரிஸ் என்ற படத்தில் அப்பாணி ரவி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இதனால், இவர் ரசிகர்களால் அப்பாணி சரத் என்று அழைக்கப்படுகிறார். இவர் தமிழில் செக்க சிவந்த வானம், சண்டைக்கோழி-2 போன்ற படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…
சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…