கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வரும் சவுதி அரேபியா நாடு, பல கட்டுப்பாடுகளை விதித்துக் இருந்ததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி இல்லாமல் இருந்து வந்தது. தற்போது அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. காரணம் சுற்றுலா துறை மூலமும் வருமானம் ஈட்டவும் அந்நாடு முடிவெடுத்துள்ளது.
நாளை முதல் 49 நாடுகளுக்கு சுற்றுலா விசா வழங்க உள்ளது. மேலும், இதுபற்றி கூறுகையில் சவுதியில் 5 உலக பாரம்பரிய இடங்கள் உள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. மேலும் இங்கு சுற்றி பார்க்க அதிக இடம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அந்நாட்டு பெண்கள் எப்போதும் போல் உடல் முழுவதும் மூடியபடி பாரம்பரிய உடை அணிந்து வருவர். ஆனால், சுற்றுலா வரும் பெண்களுக்கு அந்த உடை கட்டுப்பாடு கிடையாது. ஆனால் ஆடைஅணியும் முறையில் நாகரிகம் தேவை எனவும் குறிப்பிடபட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை கவருவதற்காக புதிய திரையரங்குகள், ஆண் பெண் என இருபாலரும் சேர்ந்து கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகள் என பல திட்டங்களை இளவரசர் முகமது பின் சல்மான் நடைமுறைப்படுத்த உள்ளார்.
சென்ற ஆண்டு விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை காண சுற்றுலா விசா வழங்கப்பட்டது. ஆனால், அங்கு ஆல்கஹால் தடை விதிக்கப்பட்டிருந்ததால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் சவுதிக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : இன்று (ஜூன் 25, 2025) இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4…
டெல்லி : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவை சுமந்து கொண்டு ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. ஆக்சியம்-4 விண்வெளி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்,…
அமெரிக்கா : அமெரிக்காவின் B-2 போர் குண்டுவீச்சு விமானங்கள் 'ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்' என்ற திட்டத்தின் கீழ், ஈரானின் மூன்று…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 விண்வெளி வீரர்களுடன் ஃபால்கன்-9 ராக்கெட் பல தடைகளை…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…