இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகவுள்ளது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றபொது நடந்த விபத்தால் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாகி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படத்தின் படப்பிடிப்பு எதுவும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் தேர்தல் வேலையில் இருப்பதால் இந்தியன் 2 படத்திற்கான எந்த முடிவையும் அவர் எடுக்கவில்லை இதனால் இந்த படத்திற்கான மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு இந்த திரைப்படம் 50 வது படமாக உருவாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ இதுகுறித்து கூறுகையில், இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநரான ஷங்கர் மற்றும் இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் ஆகியோருடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சி. இந்த படம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திய என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…