பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடிக்க தொடங்கியதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பசிபிக் நாடுகளில் ஒன்றான டோங்காவில் கடலுக்கு அடியில் உள்ள ஹங்கா டோங்கா – ஹங்கா ஹாப்பாய் தீவில் உள்ள எரிமலை வெடித்து வருவதால் தற்போது கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.இந்த எரிமலை டோங்காவில் உள்ள ஃபோனுவாஃபோ தீவில் இருந்து தென்கிழக்கே 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
எரிமலை வெடிப்பு மற்றும் கடல் சீற்றத்தால் குடியிருப்பு பகுதிகள் மற்றும் அருகில் உள்ள தேவாலயங்கள் உள்ளிட்ட கட்டடங்களில் கடல்நீர் புகுந்துள்ளது.
இந்நிலையில்,டோங்காவின் அனைத்து பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக டோங்கா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில்,டோங்கா நாட்டின் சில பகுதிகளில் ஏற்கனவே சுனாமி தாக்க தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.இதனைத் தொடர்ந்து,சமூக வலைதளங்களில் இது தொடர்பான,வீடியோக்களும் பரவி வருகின்றன.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…