கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செயற்கை சுவாசத்தில் சிகிச்சை பெற்று வரும் எஸ். பி. பி-யின் கான்சியஸை உயர்த்தும் வகையில் அவரது பாடல்களையே சிகிச்சை அறையில் ஒலிக்க வைக்கப்பட்டுள்ளது.
இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனையடுத்து கடந்த 15ம் தேதி உடல்நிலை மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . அதனையடுத்து அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
பல கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை மாற்ற எஸ். பி. பி பாடல்கள் உட்பட பல மெல்லிசை பாடல்களை கேட்க வைக்கும் சிகிச்சை பல மருத்துவமனைகளில் நடந்து வருகிறது. அந்த வகையில் செயற்கை சுவாத்தில் உள்ள எஸ். பி. பாலசுப்பிரமணியமின் மன அழுத்தத்தை மாற்றவும், அவரது கான்சியஸை அளவை உயர்த்தவும், அவர் சிகிச்சை பெற்றும் வரும் அறையில் எஸ். பி. பி பாடிய காதல் பாடல்கள், பக்தி பாடல்கள் உட்பட அனைத்து வகை பாடல்களையும் ஒலிக்க வைத்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மன அழுத்தத்தை மாற்றிய அவரது பாடல்கள் அவரது சிகிச்சைக்கும் இசைக்கப்படுகிறது. அவர் விரைவில் மீண்டு வர பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…