பாடகர் எஸ். பி. பி-யின் கான்சியஸை உயர்த்த உதவும் அவரது பாடல்கள்.!

Published by
Ragi

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செயற்கை சுவாசத்தில் சிகிச்சை பெற்று வரும் எஸ். பி. பி-யின் கான்சியஸை உயர்த்தும் வகையில் அவரது பாடல்களையே சிகிச்சை அறையில் ஒலிக்க வைக்கப்பட்டுள்ளது.

இந்திய மொழிகளில் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்தவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அதனையடுத்து கடந்த 15ம் தேதி உடல்நிலை மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . அதனையடுத்து அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

பல கொரோனா நோயாளிகளின் மன அழுத்தத்தை மாற்ற எஸ். பி. பி பாடல்கள் உட்பட பல மெல்லிசை பாடல்களை கேட்க வைக்கும் சிகிச்சை பல மருத்துவமனைகளில் நடந்து வருகிறது. அந்த வகையில் செயற்கை சுவாத்தில் உள்ள எஸ். பி. பாலசுப்பிரமணியமின் மன அழுத்தத்தை மாற்றவும், அவரது கான்சியஸை அளவை உயர்த்தவும், அவர் சிகிச்சை பெற்றும் வரும் அறையில் எஸ். பி. பி பாடிய காதல் பாடல்கள், பக்தி பாடல்கள் உட்பட அனைத்து வகை பாடல்களையும் ஒலிக்க வைத்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மன அழுத்தத்தை மாற்றிய அவரது பாடல்கள் அவரது சிகிச்சைக்கும் இசைக்கப்படுகிறது. அவர் விரைவில் மீண்டு வர பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

கேப்டன் விஜயகாந்த் வேற விஜய் வேற – விஜய பிரபாகரன் பேச்சு!

சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…

28 minutes ago

“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!

தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…

1 hour ago

சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…

2 hours ago

அன்புமணி சொல்வது ஏற்புடையதல்ல..ராமதாஸ் குறித்த விமர்சனத்திற்கு அருள் பதிலடி!

சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…

2 hours ago

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

14 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

15 hours ago