சூர்யா, கார்த்தி அவர்களது தந்தை சிவக்குமார் ஆகியோர் இனைந்து 1 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக முதல்வர் முக.ஸ்டாலினிடம் அளித்துள்ளனர்.
கொரோனா பரவலின் இரண்டாம் அலை தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா பணிகளை மேற்கொள்ள பல பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை அளித்து வருகிறார்கள்.
அந்த வகையில் நடிகர் சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ₹1 கோடி நிவாரண நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.
கொரோனா நிவாரண நிதியை வழங்கிவிட்டு செய்தியர்களுக்கு பேட்டியளித்த சிவகுமார் பேசியது ” மக்களை கொரோனா வைரஸில் இருந்து கண்டிப்பாக காப்பாற்றியாக வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். எங்களால் முடிந்த ஒரு சின்ன உதவியாக ரூ.1 கோடி வழங்கியுள்ளோம் எல்லா மீடியாக்கள் ஆரோக்கியமாக இருங்கள் மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டிக் கொள்ளுங்கள். தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 வருடங்களாக சந்தித்து இருக்கிறேன். அவரது அரசியல் வாரிசை முதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…
வாஷிங்டன் : டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புடனான மோதலைத் தொடர்ந்து, நேற்றைய தினம் ''அமெரிக்கா…
வாசிங்டன் : பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நாடுகள், அமெரிக்காவின் பெயரைக் குறிப்பிடாமல், ஈரான் மீதான சமீபத்திய…
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள ஓடையில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை…
தெலுங்கானா: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஒரு ரியல் எஸ்டேட் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம், ஒரு ரியல் எஸ்டேட்…