விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்தேன். ஒரு வருடம் கழித்து மறுபடியும் திருவிழாவுக்கு வந்தது போன்ற உணர்வு காணப்படுகிறது. விஜய் அவர்களுக்கு ஒரு மாஸ்டர் பீஸாக இந்த படம் அமைந்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் நேற்று வெளியான நிலையில், படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. ஒரு வருடத்திற்கு பின்பு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் மிகவும் மகிழ்ச்சியுடன் திருவிழா கோலம் போல இப்படத்தை திரையரங்குகளில் சென்று கண்டுகளித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் பட இயக்குனர் சுசீந்திரன், மாஸ்டர் திரைப்படத்தின் முதல் நாள், முதல் காட்சியை கண்டு களித்தேன். இதுகுறித்து, படத்தை பாராட்டி தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘எங்கள் ஊரில் முதல் நாள் முதல் காட்சியை, விஜய்யின் மாஸ்டர் படத்தை பார்த்தேன். ஒரு வருடம் கழித்து மறுபடியும் திருவிழாவுக்கு வந்தது போன்ற உணர்வு காணப்படுகிறது. விஜய் அவர்களுக்கு ஒரு மாஸ்டர் பீஸாக இந்த படம் அமைந்துள்ளது. இப்படத்தில் விஜய் மிகவும் பிரமாதமாக நடித்துள்ளார். இந்த மாதிரியான ஒரு திரைக்கதையை விஜய் அவர்களுக்கு லோகேஷ் கனகராஜ் செய்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் திரைக்கதையை கையாண்ட விதம் ஒவ்வொரு கேரக்டரையும் கையாண்ட விதம் மிகவும் அருமையாக இருந்தது. குறிப்பாக விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தை அவர் மிகவும் அழகாக கையாண்டுள்ளார் என இப்படத்தை பாராட்டியுள்ளார்.
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…
லக்னோ : காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்திய முப்படைகளும் தயார்நிலையில் இருக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு…
திருவனந்தபும் : கேரளாவில் ரூ.8,867 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். கேரள…