வரலாற்றின் அருவருப்பான மற்றும் மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் தான் – அதிபர் டிரம்ப்!

Published by
Rebekal

வரலாற்றின் அருவருப்பான மற்றும் மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் தான் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவர்களுக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தற்போது குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் வருகிற 3ம் தேதி நடைபெறக்கூடிய ஜனாதிபதி தேர்தலுக்காக தீவிரமான பிரச்சாரத்தில் ஜனாதிபதி அவர்கள் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குடியரசு கட்சி சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற பிரச்சார பேரணியில் பேசிய அதிபர் டிரம்ப் அவர்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் அவர்கள் நிறுத்தப்பட்டதற்கு கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான ஜனாதிபதி ஜோ பைடன் தான் எனவும், அவர் ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டது நம்பமுடியாதது மட்டுமல்லாமல் அருவருப்பானது மற்றும் அவமானகரமானது எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் நாட்டை அவர் வழி நடத்தாமல் தீவிர இடதுசாரிகள் தான் நாட்டை வழிநடத்துவார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் சீனாவுக்கு ஆதரவாக அவரது வெற்றி அமையும் எனவும், சீனாவின் அச்சுறுத்தல் அதிகரிக்கும் எனவும், வேலைவாய்ப்புக்கு அச்சுறுத்தலாக இருந்த சீனாவுக்கு எதிராக தான் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்ததாகவும் இதனால் விவசாயிகளுக்கு உதவும் முடிந்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் ஜோ பைடன் வெற்றி பெற்றால் சீனா மீதான வரிகளை அவர் நீக்கி விடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

6 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

9 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

12 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

13 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

15 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

15 hours ago