குணமடைந்தவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பே இல்லை.!

Published by
மணிகண்டன்

கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை முடிந்து குணமடைந்தவருக்கு உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் சுரந்து விடும். அதனால், அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை – தென் கொரியா ஆராய்ச்சியாளர்கள்.!

உலகம் முழுக்க கொரோனா தொற்று பொதுமக்களை வெகுவாக அச்சமடைய வைத்துள்ளது. பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உலகம் முழுக்க 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், குணமடைந்த பலருக்கு மீண்டும் கொரோனா இருப்பது உறுதி செயப்பட்டு அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இது முற்றிலும் தவறான தகவல் என தென் கொரிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர். அதாவது, தற்போது கொரோனா கண்டறிவதில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் பி.சி.ஆர் கருவி மூலம் ஒருவரின் உடலில் கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பதை மட்டுமே கண்டறிய முடியும். ஆனால், அந்த வைரஸ் உயிருடன் இருக்கிறதா, அல்லது இறந்துவிட்டதா என பார்க்கமுடியாது என தென் கொரிய ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனா பாதித்த ஒருவர் சிகிச்சை முடிந்து முழுவதும் குணமடைந்தவருக்கு உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் சுரந்து விடும் அதனால், அவருக்கு மீண்டும் கொரோனா பாதிக்க வாய்ப்பில்லை எனவும், ஒரு வைரஸ் அழிக்கப்பட்டாலும், அந்த இறந்த வைரஸ் மனித உடலில் சில மாதங்கள் இருக்கும். அப்படி இருக்கையில், பி.சி.ஆர் முறைபடி சோதனை செய்கையில் கொரோனா இருப்பதாக மட்டுமே காட்டும். கொரோனா இறந்துவிட்டதா அல்லது உயிருடன் இருக்கிறதா என்பதை காட்டாது. எனவே கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவருக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை என அழுத்தமாக கூறுகின்றனர் தென் கொரியா ஆராய்ச்சியாளர்கள்.

Published by
மணிகண்டன்

Recent Posts

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: நான்கு பேர் கைது.., சிறப்பு விசாரணை குழு அமைப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…

4 hours ago

”தமிழக மீனவர்களை மீட்க” – அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…

4 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்க – தவெக.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

5 hours ago

போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு நகை திருடியதாக கூறி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞர் அஜித்…

6 hours ago

பூரி ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு.., ரூ.25 லட்சம் நிவாரணம்.!

ஒடிசா : ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஒரு கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு ஒடிசா முதல்வர் மோகன்…

6 hours ago

”மின் கட்டண உயர்வு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – அமைச்சர் சிவசங்கர்.!

சென்னை : தமிகத்தில் வீட்டு மின் இணைப்புகளுக்கு எந்தவித மின்கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.…

8 hours ago