திருப்பாவை
பாடல்: 13
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகான் போதரிக் கண்ணியாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளில்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்
-ஸ்ரீ ஆண்டாள் –
பாடல் விளக்கம் :
நம் பெருமான் பறவை வடிவமாக வந்த பகாசுரனுடைய வாயைப் பிளந்து எறிந்தவன்,கொடிய அரக்கனாகிய இராவணன் தலைகள் பத்தினையும் அறுத்து அழித்தவன் அவனுடைய வீரப் புகழைப் பாடிக் கொண்டு பிள்ளைகள் எல்லாரும் பாவை நோன்பை நோற்கும் இடத்திற்கும் போய்ப் புகுந்தனர் விடிவெள்ளி தோன்றி விட்டது.வியாழம் மறைந்துவிட்டது,பறவைகள் ஒலிகின்றன.மலர் போன்ற அழகிய இரேகை பொருந்திய விழியுடையவாளே!பாவையயே இந்த நல்ல நாளில் நீ உன் கள்ளத்தனத்தை விட்டுவிட்டு எங்களோடு கலந்து கொண்டு குளிரக்குளிரக் குடைந்து நீராடாமல்,கிடக்கையிலே கிடக்கின்றாயா? என்று அருளுகிறார் கோதை நாச்சியார்.
மாஸ்கோ : கடந்த ஜூன் 21-ஆம் தேதி மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் பதற்றத்தை…
மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு)…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20, 2025 அன்று லீட்ஸ்…
சென்னை : சென்னையைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த…
பாரிஸ் : இந்தியாவின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான நீரஜ் சோப்ரா, ஜூன் 20, 2025 அன்று பாரிஸில் நடைபெற்ற…
ஆந்திர பிரதேசம்: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சிறப்பு யோகா தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். ஆந்திர பிரதேசத்தின்…