திருப்பாவை
பாடல்: 13
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று;
புள்ளும் சிலம்பினகான் போதரிக் கண்ணியாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளில்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோ ரெம்பாவாய்
-ஸ்ரீ ஆண்டாள் –
பாடல் விளக்கம் :
நம் பெருமான் பறவை வடிவமாக வந்த பகாசுரனுடைய வாயைப் பிளந்து எறிந்தவன்,கொடிய அரக்கனாகிய இராவணன் தலைகள் பத்தினையும் அறுத்து அழித்தவன் அவனுடைய வீரப் புகழைப் பாடிக் கொண்டு பிள்ளைகள் எல்லாரும் பாவை நோன்பை நோற்கும் இடத்திற்கும் போய்ப் புகுந்தனர் விடிவெள்ளி தோன்றி விட்டது.வியாழம் மறைந்துவிட்டது,பறவைகள் ஒலிகின்றன.மலர் போன்ற அழகிய இரேகை பொருந்திய விழியுடையவாளே!பாவையயே இந்த நல்ல நாளில் நீ உன் கள்ளத்தனத்தை விட்டுவிட்டு எங்களோடு கலந்து கொண்டு குளிரக்குளிரக் குடைந்து நீராடாமல்,கிடக்கையிலே கிடக்கின்றாயா? என்று அருளுகிறார் கோதை நாச்சியார்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டனும், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட்,…
ஈரான் : இந்த போர் எப்போது நிற்கும் என்கிற அளவுக்கு கேள்விகளை இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட போர்…
திருச்சி : ஜூன் 21, 2025: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் AI171, அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிப் புறப்பட்ட…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு…
சென்னன : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆளுநர் ஆர்.என்.ரவி…