திருவெம்பாவை
பாடல்: 11
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரன்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா! வழி அடியோம் வாழ்ந்தோங்காண்! ஆரழல்போற்
செய்யா! வெண்ணீறாடி! செல்வா! சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பவாய்!
– மாணிக்கவாசகர் –
பாடல் விளக்கம்:
களைந்த நெருப்பை போன்ற செம்மை நிறமுடைய சிவபெருமானே! வெண்மையுடைய திருநீற்றை அணிந்தவனே! எல்லாச் செல்வங்களையும் உடையவனே! சிறிய இடையினையும் மை தீட்டிய அகன்ற கண்களையும் உடைய உமாதேவியின் மணாளானே! ஏயனே! வழிவழீயடிமைகளாகிய நாங்கள் வண்டுகள் மொய்க்கின்ற அகன்ற பொய்கையிலே முகேர் என்று மூழ்கிக் கைகளால் நீரைக் குடைந்து குடைந்து கழலணிந்த உன் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வாழ்ந்தோம் எங்கள் தலைவனே! நீ ஆட்கொண்டு அருளும் திருவிளையாடலின் வழிபட்ட அடியார்கள் செல்லும் நெறியெல்லாம் நாங்களும் சென்று முடித்தோம்.நாங்கள் இளைத்து விடாமல் காப்பாயாக என்று அருளுகிறார் மாணிக்கவாசகர்.
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…
மும்பை : அகமதாபாத்தில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
இஸ்ரேல் : ஜூன் 19, 2025 அன்று, இஸ்ரேல் விமானப்படை ஈரானின் மத்தியப் பகுதியில் உள்ள அராக் (Arak) மற்றும்…
அகமதாபாத் : ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171) குறித்து,…
சென்னை : ராமாபுரத்தில் கடந்த ஜூன் 12-ஆம் தேதி அன்று இரவு 9:45 மணியளவில், மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது…
தெஹ்ரானி : ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், கேஷாவர்ஸ் பவுல்வார்டில் (Keshavarz Boulevard) அமைந்துள்ள தெஹ்ரான்…