வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப் நிரந்தரமாக வசிக்கவுள்ள இல்லம் இதுதானாம்!

Published by
லீனா

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப், புளோரிடாவில்  பாம் பேச்சின் கரையோரத்தில் உள்ள ஒரு தீவில் உள்ள மார்-எ-லாகோ பண்ணை வீட்டில் வசிக்கவுள்ளார். 

கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்ற நிலையில், இந்த தேர்தலில் அமெரிக்க அதிபராக  ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். ட்ரம்ப் தோல்வியை தழுவிய நிலையில், அமெரிக்காவின் அதிகார மையமான வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். இவர் 21 குண்டுகள் முழங்க சிவப்பு கம்பளம் மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், இவர் புளோரிடாவில்  பாம் பேச்சின் கரையோரத்தில் உள்ள ஒரு தீவில் உள்ள மார்-எ-லாகோ பண்ணை வீட்டுக்கு சென்றார். இப்போது இந்த வீட்டை தனது நிரந்தர குடியிருப்பாக மாற்ற திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றவாறு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் தனது இறுதி நாட்களைக் கழித்துக் கொண்டிருந்த போது, அங்கிருந்து பாம் பீச்சில் உள்ள  இல்லத்துக்கு லாரியில் பொருட்கள் வந்து இறங்கின என அப்பகுதி மக்கள் கூறியதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது.

இந்த  இல்லம் அமெரிக்க மக்களால் ‘குளிர்கால வெள்ளை மாளிகை’ என அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், நான்கு ஆண்டுகள் ட்ரம்ப் அதிபர் பதவியில் இருந்தபோது, குளிர்காலம் வரும் பொழுது எல்லாம் இந்த இல்லத்தில் தான் கணிசமான நேரத்தை செலவிடுவார். அதனால்தான் இந்த இல்லம் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

மார்-எ-லாகோ இல்லமானது 20 ஏக்கர் பரப்பளவில் தோட்டத்துடன் கூடிய மாளிகையாக உள்ளது. இதில் 128 அறைகள் உள்ளது. 20,000 சதுர அடி பால்ரூம், ஐந்து களிமண் டென்னிஸ் கோர்டுகள், நீச்சல் குளம் என ஒரு பிரம்மாண்ட மாளிகையாக உள்ளது.  இந்த மாளிகை பார்ப்பவர்களுக்கு வியப்பை அளிக்கும் வண்ணம் உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த மாளிகை இன்னொரு சிறப்பு என்னவென்றால் மாளிகையிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடலை நேரடியாகவும் பார்த்து ரசிக்கலாம். இது  புளோரிடா  மாநிலத்தில் உள்ள இரண்டாவது பெரிய மாளிகை என அழைக்கப்படுகிறது. இந்த மாளிகையின் மதிப்பு 160 மில்லியன் டாலர்களாக இருக்கும் என கூறப்படுகிறது.

Published by
லீனா

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

3 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago