கடந்த சில தினங்களுக்கு முன்பதாக 45 நிமிடம் ஜிமெயில், யூடியூப் மற்றும் பிற சேவைகள் இயங்காததற்கு தனிநபரை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தான் காரணம் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக ஆல்பாபெட் இன்க் எனும் நிறுவனத்திற்கு சொந்தமான கூகுளின் முக்கிய செயலிகளான யூடியூப் மற்றும் ஜிமெயில் ஆகிய சேவைகள் 45 நிமிடம் உலகம் முழுவதிலும் செயல்படாமல் நின்றது. இதனால் இந்த செயலிகளை நம்பியுள்ள உலகிலுள்ள பல கோடிக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகியத்துடன், காரணம் தெரியாமலும் தவித்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது கூகுள் நிறுவனம் இதற்கான காரணத்தை கூறியுள்ளது.
பாதிப்படைந்த அன்றே இது குறித்து தங்களின் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில், இந்த ஜிமெயில் தளத்தில் ஏற்பட்ட பாதிப்பால் பலகோடிக்கணக்கானோர் அவதிக்குள்ளாக்குவார்கள் என்பதை அறிவோம், விரைவில் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி அமைக்கப்படும் எனவும் கூறியிருந்தனர், அதன் பின் 47 மணி நேரத்தில் மீண்டும் கூகுளின் அனைத்து செயலிகளும் வழக்கம் போல செயல்படத்துவங்கியது.
இந்நிலையில், தற்பொழுது இதற்கான காரணத்தை கூறிய கூகுள் நிறுவனம், அக்டோபர் மாதத்தில் பயனர்களின் விவரங்களை கணக்கிட்டதில், சில தவறுகள் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக கூகுளின் பயனர்கள் 0 என கட்டியதாக தெரிவித்துள்ளது. மேலும், அதனால் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக 45 நிமிட கால செயலிழப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளது.
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…