கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழி இது தான் என உலக சுகாதார அமைப்பின் மூத்த சுகாதார நிபுணர் ரியான் தெரிவித்துள்ளார்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது. இதன் தீவிரம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், இதனை அழிப்பதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் மிக தீவிரமாக இறங்கி உள்ளது.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸால், இதுவரை உலக அளவில், 4,012,857 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 276,216 பேர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் மூத்த சுகாதார நிபுணர் ரியான் அவர்கள் கூறுகையில், உலக நாடுகள் அனைத்தும், பொது சுகாதாரக் கட்டமைப்பின் அடிப்படையான விதிகளை நடைமுறைப்படுத்துவதில், கவனம் செலுத்துவதுதான் நீண்ட கால சவாலான கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான வழி என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கற்பனை செய்யமுடியாத இழப்புகளைத் தவிர்க்க, மறுபடியும் உலக நாட்டின் அரசுகள், பாதிக்கப்பட்டவர்களை கண்டடைதல், தடம் வழி கண்டறிதல், சோதனைக்கு உட்படுத்துதல், தனிமைப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் போன்ற நடைமுறைகளை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் ரியான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…