Thyroid : தைராயிடு பிரச்னை உள்ளவரா நீங்கள்..? அப்ப மறந்தும் இதெல்லாம் சாப்பிட்றாதீங்க..!

Published by
லீனா

தைராய்டு என்பது கழுத்தில் உள்ள  ஒரு வகையான சுரப்பி. இது தைராக்ஸின் மற்றும் ட்ரையோடோதைரோனின் ஆகிய இரண்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் உடலின் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது.

தைராய்டு நோய் என்பது தைராய்டு சுரப்பி சரியாக செயல்படாததினால் ஏற்படக்கூடியது ஆகும். இது இரண்டு வகைப்படும். அவை, ஹைப்போதைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம் ஆகும். ஹைப்போதைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி போதுமான அளவு ஹார்மோன்களை உற்பத்தி செய்யவில்லை என்றால் ஏற்படக்கூடியது. ஹைப்பர் தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பி அதிக அளவு ஹார்மோன்களை உற்பத்திசெய்தால் ஏற்படக்கூடியது.

அறிகுறிகள் 

ஹைப்போதைராய்டிசம் பிரச்னை உள்ளவர்களுக்கு சோர்வு, எடை அதிகரிப்பு, குளிர் உணர்வு, மலச்சிக்கல், தோல் வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்னை ஏற்படும். அதேபோல், ஹைப்பர் தைராய்டிசம் பிரச்னை உள்ளவர்களுக்கு எடை இழப்பு, அதிக இதயத் துடிப்பு, வியர்வை, தூக்கமின்மை, கைகள் மற்றும் கால்களில் நடுக்கம், மனநிலை மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள் 

கொழுப்பு நிறைந்த உணவுகள் தைராயிடு ஹார்மோன்களின் செயல்பாட்டைத் தடுக்க கூடும்.  இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, முட்டையின் மஞ்சள் கரு, முழு கொழுப்பு பால் மற்றும் சீஸ் ஆகியவை இந்த கொழுப்பு நிறைந்த உணவுகள் அடங்கும். அதேபோல், காபி மற்றும் ஆல்கஹால் தைராயிடு ஹார்மோன்களின் உற்பத்தியைத் தடுக்க கூடும் எனவே இந்த உணவுகளை தடுப்பது நல்லது.

இனிப்பான உணவுகளில் கால்சியம் அதிகமாக காணப்படும் என்பதால், அதிகப்படியான இனிப்பான உணவுகளை தவிர்ப்பது நல்லது.

சாப்பிடவேண்டிய உணவுகள் 

தைராயிடு பிரச்னை உள்ளவர்கள், தைராயிடு ஹார்மோன்கள் உற்பத்திக்கு அயோடின் மிகவும் அவசியமானது. எனவே அயோடின் நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது. அயோடின் நிறைந்த உணவுகளில் மீன், கடல் உணவு, பால் மற்றும் பால் பொருட்கள் அடங்கும்.

தைராயிடு ஹார்மோன்களின் உற்பத்திக்கு புரதம் தேவைப்படுகிறது. இறைச்சி, பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் பால் பொருட்கள் புரதம் நிறைந்த உணவுகளாகும். தைராயிடு நோய் உள்ளவர்கள் தங்கள் உணவு முறையை மிகவும் கவனமாக கடைபிடிப்பது அவசியமாகும்.

Published by
லீனா
Tags: FoodThyroid

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

9 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

10 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

11 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

11 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago