அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா செயலியான டிக்டாக்கிற்கு செப்டம்பர் வரை கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார் .
டிக்டாக் செயலிக்கு இந்த ஆண்டு மோசமான காலமாக அமைந்துள்ளது .இந்தியாவில் டிக்டாக் செயலி உட்பட 59 செயலிகளை மத்திய அரசு தடைசெய்துள்ளது .இந்நிலையில் அமெரிக்காவில் டிக்டாக் கை தடைசெய்ய டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார் .கடந்த சனிக்கிழமை அமெரிக்காவில் தடைசெய்யப்படும் என்ற தகவல் வெளியானது,இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக் செயலியை வாங்கி சமூகவலைதளத்தில் கால்பதிக்க தீவிரம் காட்டிவருகிறது.
இந்நிலையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் இது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் .வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பைட்டான்ஸ் நிறுவனம் டிக்டாக்கை ஏதாவது ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்றுவிட வேண்டும் என்றும் இல்லை என்றால் அமெரிக்காவில் டிக்டாக் முற்றிலுமாக தடைசெய்யப்படும் என்று எச்சரித்துள்ளார் .
டிக்டாக் கை வாங்கும் நிறுவனம் அமெரிக்க நிறுவனமாக இருக்க வேண்டும் .அப்படி இருக்கையில் எங்களுக்கு எந்த பாதுகாப்பு பிரச்சனையும் இல்லை மேலும் டிக்டாக் கை வாங்கும் நிறுவனம் அமெரிக்க அரசுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .அடுத்த 6 வாரத்திற்குள் செப்டம்பர் 15 திற்குள் விற்றுவிட வேண்டும் என கெடு விதித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.
இந்நிலையில் பைட்டான்ஸ் நிறுவனம் பிரிட்டனில் தலைமையிடத்தை நிறுவுள்ளதாக முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…