போக்குவரத்துக்கு விதி மீறல்கள் – வளைகுடா அரசு அறிவித்துள்ள புதிய அபராதம்!

Published by
Rebekal
போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதத்தை வளைகுடா நாடான குவைத் அரசு சட்டநீதிமன்றத்தில் பரிசீலனைக்காக அனுப்பியுள்ளது.
வளைகுடா நாடான குவைத் நாட்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவோருக்கான திருத்தப்பட்ட சட்டம் நாட்டின் தேசிய சட்டமன்றத்திற்கு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட சட்டத்தின்படி வாகனங்களை பொறுப்பற்ற நிலையில் ஓட்டுவது, சிவப்பு விளக்குகளை எரிய வைத்துக்கொண்டு ஓட்டுவது, வேகமாக வாகனம் ஓட்டுவது, அல்லது நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டுவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு 200 முதல் 500 தினார் வரை அபராதம் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு 3 மாத சிறை தண்டனையும் வழங்கப்படும் என சட்டத்தில் உள்ளது. இத்துடன் 10 வயதிற்குட்பட்ட குழந்தையை முன் இருக்கையில் அமரவைத்து வாகனத்தை ஓட்ட அனுமதிக்க கூடியவர்களுக்கு 100 முதல் 200 தினார் வரை அபராதமும், இரண்டு மாத சிறை தண்டனையும் அனுமதிக்கப்படும்.
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் மற்றொரு நபரின் வாகனத்தை பயன்படுத்துபவர்களுக்கு போக்குவரத்து விதிமீறல் சட்டத்தின் கீழ் 100 முதல் 200 தினார் வரை அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தின் போது சேதத்தை விபத்தின் மூலம் ஏற்படுத்துதல், குறைபாடுள்ள வாகனத்தை தெரிந்தே ஓட்டுதல், சரியான போக்குவரத்து பாதைகளில் ஓட்டாமல் தாறுமாறாக ஓட்டுதல் போன்ற அனைத்து குற்றங்களுக்கும் 100 முதல் 200 தினார் வரை அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை நிறுத்துபவர்கள் நடைபாதைகளில் வாகனங்களை ஓட்டுபவர்கள், உயர் மின் விளக்குகளை பயன்படுத்துபவர்கள், அதிக சத்தம் கொண்ட ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவோருக்கு ஒரு மாத சிறை தண்டனையும் 50 முதல் 100 வரை அபராதம் விதிக்கப்படும் என திருத்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

கமலுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் விருது குழு.! மொத்தம் 534 பேருக்கு அழைப்பு.!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 98வது அகாடமி விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 15ம் தேதி 6 அன்று…

22 minutes ago

”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள 'கூமாபட்டி' கிராமம் திடீரென ரீல்ஸ்களில் வைரலாக தொடங்கியது. 'இந்த பக்கம்…

26 minutes ago

கேரளா மழை: 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளாவில் பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், அணைகள் திறக்கப்படுவதாலும் அம்மாநிலம் முழுவதும்…

2 hours ago

“இரு சக்கர வாகனங்களுக்கு சுங்க வரி – தவறான செய்தி” நிதின் கட்கரி விளக்கம்.!

டெல்லி : இதுவரை தேசிய நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்கள் இலவசமாக இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஜூலை 15,…

2 hours ago

பழம்பெரும் நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார்.!

சென்னை : குணச்சித்திர நடிகர் ஜி.சீனிவாசன் உடல்நலக்குறைவால் சென்னையில் நெற்றிரவு காலமானார். இயக்குநர், எழுத்தாளர், நடிகர் என பன்முகத் திறன்…

2 hours ago

போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜூலை 10 வரை நீதிமன்றக் காவல்.!

சென்னை : போதைப்பொருள் வழக்கு தொடர்பான விசாரணையில், தமிழ் திரைப்பட நடிகர் கிருஷ்ணா மற்றும் போதைப்பொருள் சப்ளையர் எனக் கூறப்படும்…

2 hours ago