அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையை வரவேற்கும் விதமாக திருக்குறளோடு..காந்தியின் கொள்கையை தாங்கிய வீடியோ பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் இது தற்போது வைரலாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2 நாள் பயணமாக நேற்று முற்பகல் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு வருகை தந்தார் உடன் மனைவி மற்றும் மகளும் வருகை தந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியுடன் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்றார்.பின் ஆக்ராவிலுள்ள உலக அதிசியங்களில் ஒன்றான தாஜ்மகாலை தனது குடும்பத்தினருடன் ட்ரம்ப் பார்வையிட்டார்.மேலும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.மேலும் ட்ரம் வருகையால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தான் டிரம்ப் வருகையையொட்டி, காந்தியின் அஹிம்சைக் கொள்கைகளை திருக்குறள் மூலம் உலகிற்கு பரப்பும் விதமாகஏ.ஆர். ரஹ்மானும், யு2 நிறுவனமும் இணைந்து தயாரித்த ‘அஹிம்சா’ என்கிற பாடலை அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு அர்ப்பணித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவிட்டு உள்ளார். ஏ.ஆர் ரஹ்மானின் மகள்களான காதிஜா மற்றும் ரஹிமா ஆகியோர் இந்தப் பாடலை பாடி உள்ளனர்.
உலக பொதுமறையான திருக்குறளில் இன்னா செய்யாமை’ என்ற அதிகாரத்தில் இருந்து,
‘செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.’‘என்கிற திருக்குறளுடன் தொடங்குகின்றது.தமிழைப் போற்றும் விதமாக முதலில் குறள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள அத்தனை வரிகளும் ஆங்கிலத்திலேயே அமைந்துள்ளது.இந்த பாடலை ஏ.ஆர்.ரகுமான் அதிபர் ட்ரம்புக்கு டேக் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…