ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் ஃப்ளீட்ஸ் வசதியை நீக்குவதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரோ-பிளாக்கிங் தளமான டுவிட்டர் நிறுவனம்,கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு ஃப்ளீட்ஸ் என்ற வசதியை அறிமுகப்படுத்தியது.இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸைப் போன்று 24 மணி நேரத்திற்குப் பிறகு மறைந்துவிடும்.மக்களை ட்வீட் செய்ய தூண்டும் முயற்சிக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில்,பயனர்களின் குறைந்த பயன்பாடு காரணமாக ஃப்ளீட்ஸ் வசதியை நீக்குவதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது.இதனால்,ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்குள் ஃப்ளீட்ஸ் முற்றிலுமாக நீக்கப்படும்.முன்னதாக,எட்டு மாதங்களுக்குப் பிறகு,புதிய நபர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு காணப்படவில்லை என்று டுவிட்டர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டுவிட்டர் நிறுவனம்,தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் கூறியதாவது:”ஆகஸ்ட் 3 ஆம் தேதி நாங்கள் ஃப்ளீட்ஸை நீக்குகிறோம் .அதற்கு பதிலாக,வேறு சில புதிய விஷயங்களைச் செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
மேலும்,இது தொடர்பாக டுவிட்டரின் தயாரிப்பு துணைத் தலைவர் இலியா பிரவுன் கூறுகையில்:”டுவிட்டர் உரையாடலில் மக்களுக்கு வசதியாக இருக்க இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் போன்ற வடிவமைப்பைச் செய்வதற்கான நிறுவனத்தின் முயற்சியாக ஃப்ளீட்ஸ் இருந்தது.ஆனால், இதனை நாங்கள் அறிமுகப்படுத்தியதிலிருந்து, எதிர்பார்த்தது போல புதிய நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை”,என்று தெரிவித்தார்.
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…
திண்டிவனம்: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் டாக்டர் எஸ். ராமதாஸ், கட்சியின் தலைமை நிர்வாகக் குழுவில் இருந்து தலைவர்…
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…