வடக்கு சிரியாவில் 2 துருக்கிய வீரர்கள் கொல்லப்பட்டதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
துருக்கி ராணுவ கவச வாகனம் தாக்கப்பட்டு, இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் இரண்டு வீரர்களை காயமடைந்துள்ளனர் என்று துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. துருக்கி எல்லைக்கும் வடக்கு அலெப்போவிற்கும் இடையிலான ஒரு பகுதியை உள்ளடக்கிய யூப்ரடீஸ் ஷீல்ட் பகுதியில் நேற்று இந்த தாக்குதல் நடந்தாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘பயங்கரவாத’ இலக்குகளைத் தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்று அமைச்சகம் கூறவில்லை, ஆனால், பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டுள்ளது. துருக்கிக்குள் பல ஆண்டுகளாக கிளர்ச்சியை நடத்தி வரும் குர்திஷ் குழுவின் விரிவாக்கமாக இது கருதப்படுகிறது.
இதனிடையே, துருக்கியில் பல பயங்கர குண்டுவெடிப்புகளுக்கு பின்னர், இஸ்லாமிய அரசு குழுவை வெளியேற்றும் நோக்கத்துடன் தனது முதல் எல்லை தாண்டிய நடவடிக்கையை 2016ல் சிரியாவிற்கு அறிமுகப்படுத்தியது. இது ஆபரேஷன் யூப்ரடீஸ் ஷீல்ட் என்று அழைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
மேலும், துருக்கி, வடக்கு சிரியாவில் மற்ற மூன்று நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவர்களில் பெரும்பாலோர் ஒய்.பி.ஜி பிரிவை சேர்ந்தவர்கள். ஐ.எஸ் உடன் போராடிய ஒரு பிரிவின் முதுகெலும்பாக அமைந்த சிரிய குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்க ஆதரவு அளிப்பதால் துருக்கி அரசு கோபமடைந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…
அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…
விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…
நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…