டெல்லியில் ‘மன் கி பாத்’துக்கு பதிலாக ‘ஜன் கி பாத்’தை பிரதமரின் குரலுக்கு பதிலாக மக்களின் குரல் தான் ஓங்கு ஒலித்துள்ளது என்றும் டெல்லி சட்டசபை தேர்தலில் பெரும்பாண்மைப் பலத்தோடு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவிக்கையில் மராட்டியம் மற்றும் சிவசேனா சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி மக்களுக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கிறோம் என்று குறிப்பிட்டு உள்ளார். தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது குறித்து உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
அந்த விமர்சனத்தில் டெல்லி தேர்தலில் ஒரு அரசாங்கம் (மத்திய அரசு) வெற்றிபெற முழு அரசு எந்திரத்தையும் பயன்படுத்தியது. ஆனால் என்ன செய்வது துடைப்பத்தின் முன்னால் அது தோல்வி அடைந்துவிட்டது. அரசியல் எதிரிகள் எல்லோரும் தேசவிரோதிகள். தாங்கள் மட்டும் தேசத்தை நேசிப்பவர்கள் என்ற மாயையில் காட்டிய சிலர் இருந்தனர்.ஆனால் டெல்லி மக்கள் அவர்களுக்கான இடத்தை காட்டிவிட்டனர். வெற்றிப்பெற்றுள்ள கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி என்று அழைக்கப்பட்டார்.
தேர்தலில் உள்ளூர் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு சர்வதேச பிரச்சினையை கொண்டு வந்து மக்களின் மனதை மாற்ற பாஜக முயன்றது. ஆனால் அது ஒன்றும் நடக்கவில்லை.டெல்லியில் ‘மன் கி பாத்’துக்கு பதிலாக ‘ஜன் கி பாத்’தை அதாவது பிரதமரின் குரலுக்கு பதிலாக மக்களின் குரல் தான் மக்கள் வெற்றி அடைந்தது என்று கூறியுள்ளார்
சென்னை : நிதி முறைகேடு செய்து விட்டதாக, சன் நெட்வொர்க்கின் தலைவரும், தனது சகோதரருமான கலாநிதி மாறனுக்கு, முன்னாள் மத்திய…
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…