ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் வெற்றிகரமாக மீண்டு வரும்- உக்ரைன் அதிபர்..!

Published by
murugan

ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் வெற்றிகரமாக மீண்டு வரும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

காணொலி வாயிலாக ஐரோப்பா கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார். அப்போது, ஐரோப்பா கூட்டமைப்பு சட்டங்களை மீறி உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் குண்டு வீசி தாக்குவதாகவும், மக்களில் சிலருக்கு இந்த நாள் நல்ல நாளாக இல்லை. வேறு சிலருக்கு இந்த நாள் தான் வாழ்வின் கடைசி நாள். தாய்நாட்டை பாதுகாத்துக் கொண்டு இருக்கும் உக்ரைன் குடிமக்களை பற்றி நான் பேசுகிறேன் என தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பா கூட்டமைப்பு  ஒற்றுமையுடன் இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள் குண்டு வீச்சில் உயிரிழந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். 5 நாட்களாக ரஷ்ய கூட்டமைப்பு குழு அளவிலான தாக்குதலை உக்ரைன் மீது நடத்தி வருகிறது. சுதந்திரமாகவும் , சமத்துவமாகவும் வாழ வேண்டும் என்பதற்க்காக உயிரை தியாகம் செய்து வருவதாகவும், உக்ரைனியரான நாங்கள் யாரையும் வெற்றிகொள்வோம்.

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய கொண்டாட்டங்கள் நடைபெறும்  சுதந்திர சதுக்கம் உக்ரைனில் கீவ் நகரில் அமைந்துள்ளது. இன்று காலையில் உக்ரைனின் சுதந்திர சதுக்கத்தின் மீது இரு ஏவுகணைகள் வீசப்பட்டதில் பலநூறு பேர் மாண்டு விட்டனர். சுதந்திரத்துக்கான போருக்கு, உக்ரைனியர்கள் பல நூறு உயிர்களை விலையாக கொடுத்துள்ளனர். எங்கள் மண்ணுக்கான , சுதந்திரத்துக்காக உக்ரைன் மக்கள் உயிர்களை தியாகம் செய்து கொண்டு வருகின்றனர்.

உக்ரைனின் அனைத்து நகரங்களும் யாரும் நுழைய முடியாதபடி தடைகள் அமைத்து தடுக்கப்பட்டுள்ளன.  யாராலும் எங்கள் ஒற்றுமையை உடைக்க முடியாது. உக்ரைனியர்களான நாங்கள் பல மாணவர்கள், எங்கள் குழந்தைகள் உயிர் வாழ வேண்டும் என்று விரும்புகிறோம். நேற்று ரஷ்ய இராணுவம் குண்டு வீசியதில் 16 குழந்தைகள் கொல்லப்பட்டு விட்டனர். இராணுவ நிலைகளை தாக்கியதாக புதின் கூறுகிறார். எந்த இராணுவ தொழிற்சாலையில் குழந்தைகள் பணியாற்றுகின்றனர்? ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து உக்ரைன் வெற்றிகரமாக மீண்டு வரும்  என தெரிவித்தார்.

 

 

 

Recent Posts

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!

சென்னை : பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிப்பறைகள் பொது மக்களின் பயன்பாட்டிற்கு அல்ல, மாறாக பெட்ரோல் நிலைய ஊழியர்கள் மற்றும்…

19 minutes ago

“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் 2027 சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000…

1 hour ago

அமெரிக்கா கிட்ட பேச்சுவார்த்தையா? வாய்ப்பே இல்லை மன்னிக்கவே மாட்டோம்! ஈரான் திட்டவட்டம்!

தெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இரண்டுக்கும் இடையே 10-வது நாளாக போர் நடைபெற்று வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago

“பாஜக எப்போதும் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுக்காது”- சீமான் சாடல்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மத்திய அரசின்…

3 hours ago

விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல் : ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது…

4 hours ago

தீவிரமடையும் போர் : இஸ்ரேல் விமான நிலையத்தை குறி வைத்து தாக்கிய ஈரான்!

தெஹ்ரான் : இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் உட்பட பல முக்கிய இடங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்…

5 hours ago