அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கூறியுள்ளார்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோயால் அதிகம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ள நாடு அமெரிக்கா.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனா விவகாரத்தில், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால், அமெரிக்கா, அந்நிறுவனத்திற்கு அளித்து வந்த நிதியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ், அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிதியை நிறுத்தி வைத்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா அளிக்கும் நிதி மற்ற நாடுகளுக்கும் மட்டுமன்றி, அமெரிக்காவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என கூறியுள்ளார்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் தொற்று குறைய தொடங்கியுள்ள நிலையில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தற்போது தான் இந்த வைரஸ் நோய் பரவ துவங்கியுள்ளது. இந்த தொற்றானது நீண்ட காலம் நீடித்திருக்கும் என்பதால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என டெட்ராஸ் கூறியுள்ளார்.
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…