சீனாவுக்கு அமெரிக்க நிபுணர்கள் குழுவை அனுப்ப முடிவு செய்துளேன் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
உலக முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.முதலில் சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் தான் கொரோனா வைரஸ் பரவியது.இதன் பின்னர் தான் உலக நாடுகளை இந்த வைரஸ் தாக்கி வருகிறது.ஆனால் கொரோனா வைரசை சீனா தான் உருவாக்கியுள்ளது என்று அமெரிக்கா சந்தேகப்பட்டு வருகிறது. உஹான் மருத்துவ ஆய்வகத்தின் வைரஸ் தொடர்பான பரிசோதனையின் போது கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகப்படுவதாகவும், அதனை உறுதிபட தெரிவிக்க ஆதாரங்கள் ஏதும் இல்லையென்றும் கூறப்படுகிறது.
இதன் விளைவாகத்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று கூறி வந்தார்.இதற்கு சீனா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இந்த சமயத்திலும் இரு நாடுகளிடையே பனிப்போர் அதிகரித்து தான் வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில்,கொரோனா வைரஸ் சீனாவில் எப்படி பரவியது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்த சீனாவுக்கு அமெரிக்க நிபுணர்கள் குழுவை அனுப்ப முடிவு செய்துளேன்.இதற்காக சீனாவிடம் நாங்கள் அனுமதி கோரினோம்.ஆனால் அவர்கள் பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக…