தலிபான்களுடன் நட்புறவை வளர்க்கத் தயாராக இருக்கிறோம் – சீனா அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களுடன் நட்புறவை வளர்க்கத் தயாராக இருக்கிறோம் என்று சீனா அறிவிப்பு.

ஆப்கானிஸ்தானில் தலிபான் அமைப்பினர் தலைமையிலான அரசுடன் நடப்பு ரீதியிலான உறவுகளை மேம்படுத்த தயாராக இருக்கிறோம் என்று சீனா தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்கள் தலைமையிலான அரசை பாகிஸ்தான் ஏற்கனவே அங்கீகரித்த நிலையில், சீனாவும் தற்போது ஆதரவு கரம் நீட்டியுள்ளது.

இதனிடையே, ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான் அமைப்பினர் நடவடிக்கையை பொறுத்து அவர்களின் அரசை அங்கீகரிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என ரஷ்யா அறிவித்திருந்தது. மேலும், தலிபான் தலைமையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலையில், ஆட்சி பொறுப்பு முழுமையாக தலிபான் அமைப்பினரிடம் வந்தது. மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது தூதரகத்தை முழுமையாக காலி செய்து விட்டதாக அமெரிக்கர் அறிவித்துள்ளது.

விமான நிலையத்தில் பாதுகாப்பு படை உதவியுடன் தங்கியுள்ள அமெரிக்கர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து என அறிவித்தனர். விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சூழல் விமான நிலையத்தில் இன்று காலை துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.

மேலும், விமான நிலையம் மூடப்பட்டதால் ஆப்கானிஸ்தான் நாட்டில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நிலவி வருகிறது. பிற்பகல் 12.30க்கு டெல்லியில் இருந்து புறப்பட இருந்த ஏர் இந்தியா விமானத்தை இயக்க முடியாத சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஏற்கனவே 129 பேர் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அடுத்த விமானம் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

மீதமிருக்கும் ஐபிஎல் போட்டிகளில் மாற்று வீரர்களை இணைக்க கட்டுப்பாடுகளுடன் அனுமதி.!

டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…

9 hours ago

சர்ச்சை கருத்து : பாஜக அமைச்சர் மீது எப்.ஐ.ஆர் பதிய ம.பி. நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…

10 hours ago

“வக்ஃபு மசோதா- இடைக்கால நடவடிக்கையில் தவெக பங்கு” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…

10 hours ago

இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.., பார்கவஸ்த்ரா சோதனை வெற்றி.!

ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…

11 hours ago

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

12 hours ago

கோடை மழை.., அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

13 hours ago