கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் தெரியுமா.?

Published by
பால முருகன்

நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் விருமன் திரைப்படத்திலும் நடித்துமுடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகிறது. விரைவில் விருமன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த படங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ராஷிகண்ணா, ராஜீஷா விஜயன் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ‘ஜோக்கர்’ புகழ் பெற்ற இயக்குனர் ராஜு முருகனுடன் கார்த்தி கைகோர்க்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த கார்த்தி – ராஜு முருகன் திட்டம் இயக்கி கார்த்தி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மே மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘சர்தார்’ படத்தின் படப்பிடிப்பை கார்த்தி ஏப்ரல் மாதம் முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

விண்வெளி நிலையத்தை அடைந்த டிராகன்…புதிய சாதனை படைத்தார் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…

54 minutes ago

அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…

1 hour ago

இருசக்கர வாகனங்களுக்கு சுங்கக் கட்டனமா? NHAI கொடுத்த விளக்கம்!

டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…

2 hours ago

ஹிந்தி இந்திய மொழிகளுக்கு நண்பன் – உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…

3 hours ago

இனிமே ஒரே விலையில் ஆட்டிறைச்சி விற்பனை -தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…

3 hours ago

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.., கோயம்புத்தூர், நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை.!

சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…

3 hours ago