கொரோனாவின் மோசமான தாக்கம் இனி தான் வரக்கூடும்.. கொரோனவுடன் வாழ வேண்டும்- உலக சுகாதார அமைப்பு!

Published by
Surya

கொரோனா வைரசின் தாக்கம் முடிவடைவதற்கான காலம் அருகில் கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மை எனவும், மக்கள் கொரோனவுடன் வாழவேண்டும், வேற வழியே இல்லை என உலக சுகாதார துறை அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

சீனா, வுஹானில் பரவதொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம், உலகளவில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தால் உலகளவில் இதுவரை 10,592,134 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5.14 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் பல உலகாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், சீனாவில் முதலில் கொரோனா தொற்று உறுதியான நாள் முதல் இன்று வரை உலகளவில் இதுவரை 1.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர், இந்த வைரஸின் தாக்கம் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என விரும்புகிறோம். நாம் அனைவரும் வாழ்க்கையை தொடர விரும்புகிறோம் என தெரிவித்த அவர், இந்த வைரசின் தாக்கம் முடிவடைவதற்கான காலம் அருகில் கூட இல்லை என்பதுதான் கசப்பான உண்மை. இதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், அதன் தாக்கம் வேககமடைந்துள்ளது. மேலும், கொரோனாவின் மோசமான தாக்கம் இனிதான் வரும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் உலக மக்கள் கொரோனவுடன் வாழ வேண்டும் என தெரிவித்தார். அதுமட்டுமின்றி, கொரோனா பரவுவதற்கான காரணத்தை கண்டறிய, சீனாவுக்கு இந்த வார இறுதிக்குள் குழுவினர் அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Published by
Surya

Recent Posts

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

8 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

50 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

1 hour ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

4 hours ago