womanbrutallyattacked [Image source : file image]
உத்தரபிரதேசத்தில் வரதட்சணைத் தகராறு காரணமாக பெண் ஒருவரை அவரது மாமியார் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பெண் ஒருவர் அவரது மாமியாரால் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை தகராறு காரணமாக அந்த பெண் தாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த பெண்ணை தாக்கும் வீடியோ இணையத்தி வைரலாகி வருகிறது.
அதில், அந்த பெண்ணை அவரது மாமியார் வலுக்கட்டாயமாக தனது வீட்டை விட்டு வெளியே இழுத்து தள்ளுகிறார். பின் ஒருவர் அந்த பெண்ணை கோடாரியால் தாக்குவதையும், வேதனையில் அந்த பெண் கூச்சலிடுவதையும் காணலாம். அந்த பெண் தனது தாய் வீட்டில் இருந்து திரும்பி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தின் வீடியோ வைரலானதையடுத்து காவல்துறையினர் உடனடியாக விசாரணை நடத்தி பெண்ணின் மாமனாரை கைது செய்தனர். காவல் உதவி ஆணையர் கூறுகையில், பெண்ணின் மாமனார் காவலில் வைக்கப்பட்டுள்ளார், தாக்குதலில் ஈடுபட்ட மற்ற அனைத்து நபர்களையும் கைது செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…