heat wave in Delhi [File Image]
டெல்லி : வட இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவில், நேற்றைய தினம், 50 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பம் பதிவாகியுள்ளது. சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று (மே 30ஆம் தேதி) ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் உள்ளூர் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், லேசான முதல் மீதமான மழையுடன், இடியுடன் கூடிய காற்று (மணிக்கு 25-35 கிமீ வேகம்) வீச வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.
ஜூன் 1 வரை மேகமூட்டமான வானிலை நீடிக்கும் என்றும், ஜூன் 4 வரை மழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, வெப்பநிலைக்கான எச்சரிக்கையை ‘சிவப்பு’லிருந்து வாபஸ் பெற்று ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வெப்பநிலையானது 2°C முதல் 3°C வரை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 45°C வரை இருக்க கூடும் என கணித்துள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் 126 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதுதான் நடப்பு ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை என்றும் கூறப்பட்டது.
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…
சென்னை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.…
சென்னை : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அது குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 18ம்…
கடலூர் : கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8) காலை 7:40 மணியளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது…
எமிரேட்சு : ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இந்தியர்களுக்கு கோல்டன் விசா திட்டத்தை ஏற்கனவே இருந்ததை விட இப்போது கொஞ்சம்…